‘யாத்ரா’ ‘யாத்ரா’ கவிதைகளுக்கான இதழாக 2000ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. புத்தாயிரத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தமிழ்க் கவிதை இதழாக இது அமைகிறது. கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கவிதை நூல் விமர்சனங்கள், கவிதை இலக்கியம் குறித்த கட்டுரைகள் மற்றும் கவிதை குறித்த கருத்துப் பரிமாறல்களையும் உள்ளடக்கியதாக இது வெளிவருகிறது. இதுவரை 19 இதழ்கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் கவிதை இதழ்கள் பெரும்பாலும் நான்காவது இதழுடன் தனது வாழ்வை முடித்துக் கொண்டதே வரலாறாக இருந்து வருகிறது. ‘யாத்ரா’ அதற்கு விதிவிலக்கு. இலங்கையில் மட்டுமன்றி இந்தியா. அமீரகம், மலேசியா போன்ற நாடுகளிலும் இச்சஞ்சிகை கவிதைப் பரப்பில் நன்கு அறியப்பட்டது. யாத்ரா பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு 0094 777 303 818 என்ற இலக்கத்துடன் அல்லது என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.
யாத்ரா இதழ் - 20 தனிக் கவிதை இதழாக இதுவரை வெளிவந்த யாத்ரா சஞ்சிகை, இதழ் 20லிருந்து கலை, இலக்கிய, சமூக சஞ்சிகையாக வெளிவரவிருக்கிறது. பக்கச்சார்பற்ற முறையில் நடுநிலையாக நின்று எழுதப்படும் கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள், நெடுங்கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், நவீன ஓவியங்கள், பிரதேச நாட்டார் இலக்கியங்கள், அவற்றைப் பாடக்கூடியவர்கள் பற்றிய தகவல்கள், பிரதேச மூத்த படைப்பாளிகளிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட நேர்காணல்கள் ஆகியன வரவேற்கப்படுகின்றன. ஆக்கங்களை அனுப்பி வைக்கவேண்டிய தபால் முகவரி YAATHRA
|